இரட்டை குடியுரிமைக்கொண்ட எம்.பிக்கள்: இறுதி கட்டத்தை தொட்டுள்ள விசாரணைகள்
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் விடயத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனது விசாரணைகளை இறுதி செய்யவுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பியுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம்
இது தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றம் ஏற்கனவே குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்த நிலையில் நேற்றைய தினம் இலங்கை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னர் அறிக்கை
வெளியிடப்படும் என பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
