இரட்டை குடியுரிமை எம்.பிக்கள் யார்..! குடிவரவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பட்டியல் - செய்திகளின் தொகுப்பு
22ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த சில நாட்களாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணையில், தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
