மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள்: பொலிஸார் நடவடிக்கை
வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் குற்றச்சாட்டில் இரு சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு (03.05.2024) வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுப்பதற்காக விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன்போது, மதுபோதையில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களை செலுத்திய சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri