அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை - வழங்கப்பட்டது உத்தரவு
அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்படவுள்ள சுற்றறிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவனைக்கான தேவையை முற்றாக நீக்குவதற்கும் இந்த குழுக்கள் செயற்படும். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை நாளை (17) வெளியிடப்படவுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் தமது நிறுவனத்தை போதைப்பொருள் அற்ற நிறுவனமாக உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பாவனையாளர்கள் நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கல்விச் செயலாளர் ஊடாகவும் நாளை (17) சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது. இதன்மூலம், அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.
சுற்றிவளைப்பு
தொலைதூர கிராமப் பாடசாலைகளில் கூட போதைப்பொருள் பாவனை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவசியமாகிறது. தற்போது பல இடங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க வசதியாக 1818 என்ற புதிய உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய போதைப்பொருள் சபைக்கான அலுவலகம் ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
தற்போது ஜனாதிபதி செயலகம் ஊடாக தற்காலிகமாக 1818 என்ற உதவி இலக்கம் செயற்பட்டு வருதுடன், முதல் 5 நாட்களில் மாத்திரம் சுமார் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் தற்போது சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam