ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது
ஹெரோயின் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த 2 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடைப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து விசேட அதிரடைப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி வீதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் கைப்பற்றல்
இவ்வாறு கைதான நபர்கள் சாய்ந்தமருது கல்முனை பகுதியை சேரந்த 19 மற்றும் 56 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 9 கிராம் 580 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
