தென் பகுதியில் 200 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு
இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எரிவாயு சிலிண்டர் மற்றும் சாக்கு பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு சேவையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தினர் இணைந்து வெலிகமை, பொல்லத்துருமோதர பிரதேசத்தில் மேற்கொண்டு தேடுதலின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.