பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவர் கைது
சேதுவத்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையில் போலி துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றை கொள்ளையடிப்பதற்காக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்க தயாராக இருந்த முச்சக்கரவண்டியில் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் போலி இராணுவ உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் மற்றும் உத்தியோகபூர்வ அரச இலட்சினைகள், பல்வேறு பாதுகாப்புத் திணைக்களங்களின் சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பெண் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 கிராம் 497 மில்லிகிராம் ஹெரோயினுடன், ஒரு கோடி ரூபா பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் உட்பட 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
