நுவரெலியாவில் போதைப்பொருள் விற்றவர் கைது!
நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் தகவல்
சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தபட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
மேலும், சட்ட விரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்கது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
