பாண் உற்பத்தி என்ற போர்வையில் மதனமோதகம் விற்பனை: பொலிஸார் நடவடிக்கை
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற போர்வையில் குறித்த நபர், கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.
56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
லொறியொன்றில் வெதுப்பக உற்பத்தி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 250 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
