சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம் அட்டைகள் கிடைத்துள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை (14.11.2022) முதல் அட்டைகளை அச்சிட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம்

இந்த தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அட்டைகளை வழங்கும் இலக்கை அடையும் வரை மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 1,700 அட்டைகளை அச்சிடும் திறன் திணைக்களத்துக்கு உள்ளதால், ஒரு நாள் சேவையில் 50 அட்டைகளையும் 1650 அட்டைகளை 6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்காகவும் அச்சிடவுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பிரச்சனையில் சிக்கிய சோழன்.. மனைவியாக துணை நின்று நிலா காப்பாற்றுவாரா? அய்யனார் துணை புரோமோ வீடியோ Cineulagam