மோட்டார் வாகனமொன்று பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில் சாரதி படுகாயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித்தீவு பகுதியில் மோட்டார் வாகனமொன்று பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(15) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்த நிலையில்,சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிண்ணியாவிலிருந்து சுரங்கால் நோக்கிச் சென்ற மோட்டார் வாகனமொன்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் கச்சக்கொடித்தீவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.