இலங்கையில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாது அவதியுறும் மக்கள்
இலங்கையில் சுமார் 89,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
19 மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சி நிலமை காரணமாக பெருந்தொகையான மக்கள் இவ்வாறு குடிநீருக்கு தட்டுப்பாட்டை உணர்கின்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களைச் சேர்ந்த 307,000 பேர் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய காணிகளுக்கும் நீர் பற்றாக்குறை
இதேவேளை விவசாய காணிகளும் போதியளவு நீர் வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா, மாத்தளை, கண்டி, பொலன்னறுவை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
