கடலில் புதைந்து கிடக்கும் உழவு இயந்திரங்கள்! தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது (Photos)
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த 08.01.2022 திகதி அன்று புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உழவுயந்திரத்தின் நடு சில்லின் பெரிய ரயர்கள் இரண்டு கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் குறித்த உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டி எடுக்கும் நடவடிக்கையை இன்று கலை முன்னெடுத்துள்ளார்கள்.
இரண்டு கனரக இயந்திரங்கள் கொண்டு தோண்டப்பட்டபோதும் உழவு இயந்திரங்கள் என இனம் காணப்பட்டுள்ளது. இரண்டு உழவு இயந்திரங்கள் இவ்வாறு கடற்கரை நிலத்தில் புதைந்து காணப்படுகின்றன.
இதன்போது உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நீண்டநேரமாகியும் கடல் அலையின் சீற்றம் மற்றும் கடற்தண்ணீர் வந்து கொண்டிருக்கும் காரணத்தினால் இவற்றை எடுத்துக்கொண்டு குறித்த பகுதியினை மூடிவிட்டுள்ளார்கள்.
தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு உழவியந்திரங்களின் பாகங்கள் காணப்படுகின்றன. நண்பகல் 12.00 மணிவரை தோண்டப்பட்டு மூடப்பட்டு தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதி தொடர்பிலான கண்காணிப்பில் முல்லைத்தீவு பொலிஸார்
ஈடுபட்டுள்ளார்கள்.








போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri
