சிஐடியில் முன்னிலையாகுமாறு ருக்ஷன் பெல்லனவிற்கு அழைப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் முன்னாள் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் துறையின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
டிசம்பர் 9, 2025 அன்று முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

"ருக்ஷன் பெல்லனாவ சுட அனில் ஜெயசிங்க தயாராகி வருகிறார்" என்று கூறும் காணொளியில் அசேல சம்பத் என்ற நபர் தெரிவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தின் 4வது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri