கிளிநொச்சி அரச சேவை நிலையங்களுக்கு டக்ளஸ் விஜயம்
கிளிநொச்சி (Kilinochchi) - தருமபுரம் பிரதேச வைத்தியசாலை மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் என்பவற்றிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தினை, அவர் இன்று காலை (01.06.2024) முன்னெடுத்துள்ளார்.
இதன்போது, காலை 9 மணியளவில் தருமபுரத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் சிகிச்சை புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று அதன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
கட்சி நிதி
இதனைத்தொடர்ந்து, தருமபுரம் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் நிலைமைகளை பார்வையிட்டு அங்குள்ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றில் காணப்படும் சில தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு கட்சி நிதியினை ஒதுக்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, இதன்போது, போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தின் வைத்தியர்கள், ஊழியர்கள் தருமபுரம் வைத்தியசாலை பொறுப்பதிகாரி, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நோயாளர் நலன் பரிசு சங்க நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
