மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ்

Douglas Devananda M A Sumanthiran Sri Lanka
By Kajinthan Sep 04, 2024 10:15 PM GMT
Report

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கனேடிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கனேடிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“தமிழரசு கட்சியினுடய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை வைத்திருந்தார்.

அது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது குறித்த பிரேரணியை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ் | Douglas Press Meet Speech

இவ்வாறான நிலையில் இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு, தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தமையின் தாக்கமாக இருக்கலாம்.

ஏனெனில் தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெறுகின்ற நிலையில் மாகாண சபை தொடர்பான விவாதம் சிலருக்கு தேவையாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமல் இருக்கலாம்.

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ் | Douglas Press Meet Speech

இருந்தாலும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை இறுதியாக இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசாவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளியேற்று விட்டார்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இடம் பெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும் நிலையில் தமிழ் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது.

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஆரம்ப புள்ளி என அன்றிலிருந்து அதே நிலைப்பாட்டையே கூறி வருகிறேன்.

ஆனால் தமிழ் மக்களை ஏகப்பிரதிநிதிகள் என கூறுவோர் 13 ஆவது திருத்தத்தை தொட்டுப் பாக்க மாட்டோம் என கூறிவிட்டு கடந்த மாகாண சபையில் தமிழ் இனத்தை பெற்று தர போகிறோம் என மக்களை உசிப்பேற்றி வாக்குகளை பெற்றார்கள்.

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ் | Douglas Press Meet Speech

இறுதியில் மாகாண சபையை நடத்த முடியாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து நின்று சண்டை பிடித்ததும் தமக்கு ஆடம்பர வாகனம் வேண்டும் என அயல்நாடு ஒன்றுக்கு கடிதம் அனுப்பியதுமே நடந்தது.

சக தமிழ் காட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க விடாது தமதுஅரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேத்தி அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள்.

இனியும் அவர்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதில்களை மக்கள் தமது வாக்குகளால் வழங்கியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ் | Douglas Press Meet Speech

எனது அரசியல் பயணம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது இலக்கு.

ஆகவே தமிழ் மக்கள் தமக்கான ஜனாதிபதியை தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சிறந்த ஒரு முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடை விதித்துள்ள நாடு

குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடை விதித்துள்ள நாடு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் : இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் நாடு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் : இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் நாடு

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US