பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த டக்ளஸ் தேவானந்தா(Photos)
கிளிநொச்சி- கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்றையதினம் (14.06.2023) இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு தானியப் பயிர் செய்கைக்கான விதைகளை மானிய அடிப்படையில் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சர் தானிய விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதேபோன்று, நெல்லுக்கான விலை என்பது நாடளாவிய பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், அதுதொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்காலிகமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஒரு கிலோ நெல்லை 80 ரூபாய் வீதம் கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கற்கைநெறி ஆசிரியர் பிரச்சினை
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு 2019 ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்காக உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொண்டுள்ள பாடவியல் சம்மந்தமான சவால்கள் தொடர்பாக எடுத்துரைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சாத்தியமான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





