இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: சிக்கிய மூன்று சந்தேகநபர்கள்
இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த வீதிப் பகுதியில் 24.06.2025 அன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு தொடர்பாக தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டபோதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இரட்டைக் கொலை
நேற்றுமுன்தினம்(8) திங்கட்கிழமை விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
