தேர்தல் முடிவுகள் அறிவிப்பது குறித்து எச்சரிக்கை
தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த தேர்தல்களின் போது சில ஊடக நிறுவனங்கள், பிரதேச தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்களிலிருந்து அதிகாரபூர்வமற்ற தகவல்களை பெற்றுக்கொண்டு பெறுபேறுகளை வெளியிட்டுள்ளனர்.

அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகள்
இதனால் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவிய நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam