ஈரான் போரினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு
ஈரான் போர் காரணமாக மக்கள் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பதற்றமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் போர் ஆரம்பமாகீயுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தேவையற்ற வகையில் பதற்றமடைந்துள்ளதாக கேள்விப்பட்டோம் ஆனால் அவ்வாறு பதற்றமடைய வேண்டிய எந்தவித தேவையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
இப்பொழுது கைவசம் உள்ள மொத்த எரிபொருள் கையிருப்பை கணக்கெடுத்து பார்த்தோம், எம்மிடம் எரிபொருட்களை சுமார் ஒரு மாத காலத்திற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
என்னிடம் கையறுப்பில் உள்ள எரிபொருட்களும், தற்பொழுது நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் எரிபொருள் கப்பல்களின் சரக்குக் கூட்டுத் தொகையை கணக்கிட்டு பார்த்தால் சுமார் ஒரு மாத காலத்திற்கு போதிய அளவில் எரிபொருட்கள் தற்பொழுது கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது 38 நாட்களுக்கு போதுமான அளவு பெட்ரோல் உண்டு, டீசல் சுமார் 35 நாட்களுக்கு போதுமான அளவும், விமானங்களுக்கு தேவையான எரிபொருட்கள் 47 நாட்களுக்கு போதுமான அளவு கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் களஞ்சியங்களை உள்ள இருப்பு மற்றும் வரவிருக்கும் கப்பல்களின் கூட்டுத் தொகையை பார்த்தால் இனி ஒரு கப்பல் கூட வராவிட்டாலும் சுமார் ஒரு மாத காலத்திற்கு போதிய அளவு எரிபொருள் கையிருப்பு எம்மிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல் டீசல் என சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக வருவதில்லை, அதற்கான காரணம் கப்பல் கட்டணங்கள் அதிக அளவில் அறவீடு செய்யப்படுவதனாலாகும் என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
நாம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை கொள்வனவு செய்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்த எரிபொருட்களை பெற்றுக் கொண்டுள்ளோம் ஹோமோன் சமுத்திர பாதை மூடப்பட்டாலும் எரிபொருள் இறக்குமதி செய்வதில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மசகு என்ன இறக்குமதி செய்வதில் மட்டுமே பாதிப்பு ஏற்படும் தற்பொழுது கையிருப்பில் காணப்படும் எரிபொருட்களின் அளவு ஒரு மாத காலத்திற்கு போதுமானது எனவே மக்கள் பதட்டம் அடைந்து எரிபொருட்களை களஞ்சியப்படுத்த தொடங்கினால் அது பிரச்சினையாக உருவாகும்.
மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் உலக ரீதியாக ஏற்படும் ஒரு பிரச்சனையை தனியாக நாம் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையே எல்லோரிடமும் இணைந்து முகம் கொடுக்க வேண்டும் எம்மிடம் ஒரு மாத காலத்திற்கு கையிருப்பு உள்ளது என்பதை வலியுறுத்துகின்றேன் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam