திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைப்பு
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 23ம் திகதி குறித்த நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் அலரி மாளிகையில் வைத்து இன்று இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பி.சி.ஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பாடுபட்ட கிண்ணியா தள
வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam