திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைப்பு
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 23ம் திகதி குறித்த நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் அலரி மாளிகையில் வைத்து இன்று இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பி.சி.ஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பாடுபட்ட கிண்ணியா தள
வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.



பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam