லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு
புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்பி எரிவாயு கையிருப்பு விநியோகம் இன்று (16.04.2026) முதல் மீண்டும் தொடங்கும் என எரிவாயு விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட முனையங்கள் வழியாக, கையிருப்பில் உள்ள 5000 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று சந்தையில் வெளியிடப்படும் என லாப்ஸ் கேஸ் பிஎல்சி (Laugfs Gas PLC) அறிவித்துள்ளது.
அத்துடன் லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனமும், தங்களது விநியோகப் பணிகள் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என உறுதிப்படுத்தியுள்ளது.
சீரான விநியோகம்
நிறுவனம், நுகர்வோருக்கு சீரான விநியோகம் இருக்கும் என உறுதியளித்ததோடு, மே மாதம் வரை நீடிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, எல்பி எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam