டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து கொள்ளலாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்காக இன்றையதினம்(17.3.2026) வழங்கிய செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
எரிவாயுத் தட்டுப்பாடு
மேலும், இந்த திட்டம் நாளை (18) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாங்கள் ஒரு எரிவாயுக் கப்பலுக்கும் உத்தரவிட்டுள்ளோம், அது நாளை அல்லது நாளை மறுநாள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.