மோடிக்கான தமிழர் தரப்பின் ஆவணம் இன்று கையளிக்கப்படுகின்றது!
தமிழர் தரப்பினர் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு குறித்த ஆவணம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு - கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்று கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றமையின் காரணமாக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ஆணவம் இன்று மாலை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.