அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! கறுப்பு பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முறையான அனுமதியின்றி நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (29.11.2022) காலை உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும்.

நாட்டை விட்டு வெளியேறுவோர்
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும்.
எனினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாக கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 50 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam