நாட்டு மக்களுக்கு வைத்தியர் விடுக்கும் எச்சரிக்கை
நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கொவிட் தொற்றை மறந்து செயற்படும் நிலைமையை காண முடிவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் நாட்டில் வசந்த காலத்தை கொண்டு வருவதற்காக மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையை பார்க்க முடிகின்றது.
கொவிட் தொற்றினை மறந்துவிட வேண்டாம். இன்றும் 600 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் மிகவும் போராடுகின்றார்கள்.
மக்கள் இந்த நேரத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சரியான முறையில் முகக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கொவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை ஏற்படும் அபாயம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.