கோவிட் தொற்றினால் காவு கொள்ளப்பட்ட மற்றுமொரு வைத்தியர்
குருணாகல் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சேவையாற்றி வந்த மருத்துவர் சுதத் பண்டார கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு ஆபத்தான நிலைமையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மருத்துவர் உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் சுதத் பண்டார வைத்தியசாலையின் கோவிட் நோய் சிகிச்சை பிரிவில் சேவையாற்றிய போது நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.