நாட்டின் பிரபல்யமான நபர் யார் தெரியுமா?
இலங்கையின் மிகவும் பிரபல்யமான நபர் தாமே என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி வெலிகம்பொல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் நான்கு மாதங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு மாத காலப்பகுதியில் இந்த நாட்டின் மிகவும் பிரபல்யமாக திகழும் நபர் தாமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை பசளையை பயன்படுத்தி செய்யப்படும் விவசாய நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும், இந்த திட்டம் கைவிடப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
