ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்
ஈரான்(Iran) என்ற நாடே இருக்காது, அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் ட்ரம்ப் பங்கேற்றார்.
அப்போது, ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
ட்ரம்பை கொலை
அவர், தாமஸ் குரூக் என்ற 20 வயது இளைஞர் என பின்னர் அடையாளம் காணப்படப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி, இவர், கடந்த 2020ஆம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக ட்ரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன.
ஈரானின் சதி
இந்த ஈரானின் சதி முறியடிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரான் தன்னைக் கொன்றால் அதை 'அழிக்க' வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என கடும் எச்சரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |