தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை அடக்குகிறதா அநுர அரசு!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் அடக்கப்பட்டார்கள், அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்று ஒரு சில யூடிபர்கள் சமூகவலைத்தள பக்கங்களில் தங்களது விமர்சனங்கனை முன்வைத்திருந்தனர்.
இந்த விடயம் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறனதொரு விடயம் நடக்கவில்லை, ஒரு மாதத்திற்கு முன்னரே இது குறித்து பதிவுசெய்யப்பட்டு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறனதொரு நிலையில், பொதுமக்கள் இருக்ககூடிய இடத்தில் சில யூடிபர்கள் காணொளி எடுப்பதற்காக வந்த நிலையில் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |