மக்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் - நிதியமைச்சர் பசில்
தொற்று நோய் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதால், அவர்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு மிகவும் சிறந்த சேவையை வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் சகல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச ஊழியர்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயத்தை குறைக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.