பாலர் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியில்லை என அறிவிப்பு
பாலர் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என சிறுவர் அபிவிருத்தி குறித்த தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நயனா டி சில்வா அறிவித்துள்ளார்.
பாலர் பாடசாலைகளை கலை நிகழ்ச்சிகளுக்காக ஆயத்தப்படுத்த வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் அதற்காக ஆயத்தங்களை செய்தல் என்பனவற்றின் மூலம் கோவிட் பரவக்கூடும்.
பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறார்கள் முகக் கவசம் அணியாமையானது பிரச்சினையாக உருவாகியுள்ளது.
எனவே அவர்களுக்கு உரிய முறையில் முகக் கவசங்களை அணிவிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri