ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை அரசியல்மயப்படுத்த வேண்டாம் - ரணில்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆடைக் கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரிச் சலுகைத் திட்டத்தின் ஊடாக நாட்டுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிச் சலுகைத் திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் அந்நிய செலாவணி வருமானம் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை விவகாரத்தை அரசியல்மயப்படுத்து நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.