இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்! தமிழக மீனவர்களை எச்சரித்துள்ள பொலிஸார்
இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என தமிழக பொலிஸார் தமிழக மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே மன்னாரில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான பிராந்தியத்தை அதி உணர்திறன் கொண்ட கடல் பிராந்தியாமாக அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மன்னார் முதல் ராமேஸ்வரம் வரையான கடல் பிராந்தியத்தில் மேற்கொண்டு வரும் அழிவு காரணமாக டொல்பின், நீல திமிங்கிலம், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri