முள்ளிவாய்க்காலில் இராணுவம் குவிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்! மனோ ஆதங்கம்
இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கம் அடிப்படையிலேயே ஒரு பேரினவாத அரசாங்கம். பதவிக்கு வந்ததும் பேரினவாதத்தின் மூலம் தான். தனது இருப்பை தக்க வைத்து கொள்ளவும் பேரினவாதத்தையே இந்த அரசு பயன்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட சமயத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் குறித்த பகுதி இருந்தது.
இவ்வாறான நிலையில் வேறு யாரால் அந்த தூபியை சிதைக்க முடியும்? எனவே, அவர்கள் கூறுவது முற்றிலும் பொய், ஆகையால் இதுவும் ஒரு இனவாத செயற்பாடே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam