பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video)

Sri Lanka Police Vavuniya Ranil Wickremesinghe Human Right Day Government Employee
By Thileepan May 22, 2023 06:29 AM GMT
Report

வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டால் தன்னை பொலிஸ் புலனாய்வாளர் என மக்கள் எண்ணுவதாக சமூக செயற்பாட்டாளரான சூரியகுமார் கிருபன் குற்றம்சாட்டியுள்ளார். 

அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிஸார் என கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (22.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

vavuniya

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் 219 பேருக்கான காணி திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தால் அறிவித்து இருந்தார்கள்.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் தெரியப்படுத்துமாறு கோரியிருந்தனர்.


அதன்போது நான் 219 பேரின் விபரம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தும் போது இதில் ஊழல் நடைபெற்றுள்ளது, காணி உள்ள பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகவும் தகவல் கோரி விண்ணப்பித்து இருந்தேன்.

rti

அதற்கு எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் நேரடியாக தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவ்வாறான விபரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதுடன் நேர்முகத் தேர்வு குறித்து எந்த விபரங்களும் தரப்படவில்லை.

பிரதமர் செயலகம்

இதனால் கடிதம் ஒன்று எழுதி அதனை பிரதேச செயலாளருக்கு அனுப்பி அதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன்.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

இதன்பின் பிரதமர் செயலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. இது தொடர்பில் ஆராய்வதாகவும் இது தொடர்பான பதில் பிரதேச செயலகத்தால் தமக்கு வழங்கும் வேளை, தங்களுக்கும் அது அனுப்பி வைக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் உத்தியோகத்தர்

அதற்கான பதிலை பிரதேச செயலாளர், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அதன் பிரதியை எனக்கு அனுப்பியுள்ளார்.

அதில் நான் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களும், என்னையும், எனது குடும்பத்தாரைப் பற்றியும் அவதூறுகளையும் எழுதியிருந்தார்.

அதில் நான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

பொலிஸ் புலனாய்வாளர்

அன்றிலிருந்து எனக்கு ஒரே பிரச்சினை. நான் தனியார் துறையில் வேலை செய்கிறேன்.

பிரதேச செயலகத்தால் நான் பொலிஸார் என குறிப்பிட்டுள்ளமையால் நான் செல்லும் இடங்களில் என்னை பொலிஸ் புலனாய்வாளர் என சந்தேகிக்கின்றார்கள்.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

என்னால் பொது மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கும் முறையிட்டுள்ளேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருவதுடன், ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில் முறைகேடற்ற வகையில் காணியை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US