எரிபொருளுக்கு முற்பணம் கோரும் விநியோகஸ்தர்கள்
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் முற்பணத்தை செலுத்துமாறு கோர ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இதுவரை எரிபொருளை விநியோகித்த பின்னர் பணத்தை வழங்கும் வங்கி கடன் பத்திரத்தின் அடிப்படையில் விநியோகித்து வந்த விநியோகஸ்தர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக முற்பணத்தை செலுத்துமாறு கோரி வருகின்றனர்.
இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 400 முதல் 500 மில்லியன் டொலர் வரை தேவைப்படுகிறது.
இதனிடையே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான கச்சாய் எண்ணெயை ஓமான் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த ஓமான் நிறுவனம் விலை மனுவை முன்வைத்த நிறுவனம் அல்ல என தெரியவருகிறது.
எனினும் ஆறு மாத கால கடன் அடிப்படையில் இந்த விலை மனு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டணத்தை செலுத்துவது நாள் கணக்கில் தாமதமாகி வருவதால், விநியோகஸ்தர்கள் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 28 நிமிடங்கள் முன்

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam
