மன்னாரில் மண்ணெண்ணெய் விநியோகம்(Photo)
மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (16) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணையை பெற்று வருகின்றனர்.
300 ரூபாய்
குறிப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 300 ரூபாய்க்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகம்
இதற்கமைய, மன்னார் பிரதேச செயலாளரால், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுகின்றது.
இதேவேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



