காஸ்மீர் தொடர்பான ஆய்வுக்கட்டுரை சர்ச்சை: இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து பதவி விலகும் இலங்கையின் பேராசிரியர்
இந்தியப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவருக்கு கண்காணிப்பாளராக செயற்பட்டு வந்த இலங்கை அறிஞர் ஒருவர் அண்மையில் தமது பதவியில் இருந்து விலகவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை அமெரிக்க மொழியியலாளர் மற்றும் உலகப் புகழ்பெற்ற அறிஞருமான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky)விமர்சித்ததை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
ஒழுங்கு விசாரணைக்கு அழைப்பு
புதுடில்லியில் அமைந்துள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும் பேராசிரியர் பெரேராவுக்கு எதிராக, குறித்த பல்கலைக்கழகம் ஒழுங்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்தமையை அடுத்தே இது இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் சமூகவியலை கற்பிக்கும் பேராசியர் பெரேரா, கடந்த ஆண்டு நவம்பரில், முனைவர் பட்டம் பெற்ற அறிஞரான நோம் சாம்ஸ்கியின் இந்திய காஸ்மீர் அரசியல் தொடர்பான முன்மொழிவு ஒன்றை அங்கீகரித்துள்ளார்.
எனினும், அந்த அங்கீகாரம், பல்கலைக்கழக பீடாதிபதிகர் அனுப்புவதற்கு முன்னர் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தமது ஆராய்ச்சி திட்டத்தை, முனைவர் பட்டம் பெற்ற அறிஞரான நோம் சாம்ஸ்கின் காணொளியிலும் வெளியிட்டமை தொடர்பிலும் பெரேராவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்த காணொளில் மோடி தீவிர இந்துத்துவ பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்றும், இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தகர்க்க மற்றும் இந்துவை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குறித்த முனைவர் கூறியிருப்பதாக புதுடில்லி தகவல்கள் கூறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam