யாழில் இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறல்
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதியானது இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இராணுவத்தின் 51ஆவது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512ஆவது படைப்பிரிவினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் இராணுவத்தின் 51ஆவது படையணியின் தளபதி, 512ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.