ட்ரம்ப் உடனான கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் முடிவுகள், சாதகமாக இருக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று(23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை அமெரிக்காவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கூட்டறிக்கை
அமெரிக்க வரி தொடர்பான கலந்துரையாடல் குறித்து இலங்கையும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வரிவிதிப்பு தொடர்பில் ஆலோசித்துள்ளதுடன், கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri