இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடல்
சீனாவின்(China) பீய் ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனைகளின் போது கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையும் சீனாவும் கலந்துரையாடியுள்ளன.
இரண்டு நாடுகளும் 13ஆவது சுற்று தூதரக ஆலோசனைகளை நேற்று(18.06.2024) பீய்ஜிங்கில் நிறைவு செய்துகொண்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கிடையிலான உயர்மட்ட வருகைகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இரண்டு தரப்புக்களும் மதிப்பாய்வு செய்துள்ளன.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
