திருகோணமலை மாவட்ட தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல்
தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளின் பேரில், திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் நேற்று(18) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட ஊழியர்கள், தொழிலாளர் அமைச்சகத்திற்கு அனுப்பிய முறைப்பாட்டை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வணிகர்களுடனான கலந்துரையாடலின் போது முறைப்பாட்டின் படி சட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு, முறைப்பாளர்கள் தங்கள் அறிக்கைகளைப் பதிவு செய்ய முன்வராதது, துல்லியமான பதிவுகளை பராமரிக்கத் தவறியது, கடைக்காரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் சட்டம் குறித்து வணிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து வணிகர்களுக்கும் சட்டம் குறித்த புரிதலை வழங்கும் வகையில் வரும் நாட்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளர் யூ. சிவராஜா, திருகோணமலை மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் ஜி. நவஜீவனா, துறைசார்ந்த அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
