சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள்: ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள மனு(Photos)
வடமாகாணத்தில் இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடலொன்று இடம்பெற்றள்ளது.
குறித்த கலந்துரையாடலானது சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம் தலைமையில் நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டவத்தில் நேற்று (31.12.2023) இடம்பெற்றுள்ளது.
ஆலோசனை கலந்துரையாடல்
”வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் 05
விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தில்
கொண்டு சேர்த்து அதனை அரசியலமைப்பினை உள்வாங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் (06.01.2024) அன்று யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் மனு கையளிக்கயுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம்” தெரிவித்துள்ளார்.
அந்த 05 அம்சகோரிக்கையில்,
01.பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
02.மதங்களின் மதமாற்ற முயற்சியைத்தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மதமற்ற தடைச்சட்டத்தினை இயற்ற வேண்டும்.
03.இந்துமதங்களும், பெளத்தமதங்களுக்கும் தெய்வமாக போற்றப்படும் பசுக்களை எவறும் கொல்லக்கூடாது?பசுவதை தடைச்சட்டத்தினை உருவாக்க வேண்டும்.
04.ஒவ்வொரு ஆலயங்களில் நித்தியபூஜை வழிபாட்டில் பசுவினை பூஜைகள் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.
05.ஆரம்பமுன்பள்ளி பருவத்தில் உள்ள சிறார்களின் பசுவினை பாதிப்பது பற்றிய நூல்கள் அறிமுகம் செயற்படுத்தவேண்டும்.“என்றவாறு காணப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில், இராமலிங்கேஸ்வர் அமைப்பின் செயற்பாட்டாளர் தி.சுந்தரேஸ்சன், சிவநேனை அமைப்பின் உறுப்பினர் த.புவனேந்தீரன், உருத்திரசேனை உறுப்பினர் சுஜீபன், இந்து தன்னார்ந்த தொண்டு சங்கம் தலைவர் வ.சாரகனான்,திரிலங்கா புரி ஆதீனம் தி.விபுலாந்த அடியார்,கோவிற்கடை ஜயப்பன் ஆலயத்தலைவர் த.கலாசாதக்குருக்கள், பசுவதை தடுக்கும் சமூக மன்ற தலைவர் ம.சிவலோகதேசிகசர்மா ஞானசீலன், உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







