அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரின் தகவல்

United Nations Jaffna Human Right Day Sri Lanka
By Kajinthan Dec 13, 2023 02:44 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அங்கத்துவம் பெற்ற நாடுகளின் அரசுகளை மனித உரிமைகள் விவகாரங்களில் பொறுப்பு கூற வைக்கும் பிரகடனமாக ஐ.நா மனித உரிமை பிரகடனம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி 75ஆவது மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை பாதுகாக்கும் வரைவு தொடர்பான இன்றைய (13.12.2023) கலந்துரையாடலின் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் உலக யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் யுத்தத்தின் பின்னர் மனித உரிமைகளை பாதுகாப்பதை முன்னேற்பாடாகக் கொண்டு ஐ.நா சபை தோற்றம் பெற்றது.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

30 ஏற்பாடுகளைக் கொண்ட இந்த மனித உரிமைகள் பிரகடனமானது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மனைவியான எலினா ரூஸ்வெல்ட்டினால் ஆவணமாக உருவாக்கப்பட்டது.

அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரின் தகவல் | Discussion Protection Human Rightsactivists Jaffna

ஒரு மனிதனுடைய சிவில் அரசியல் பொருளாதாரம் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவை மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான பரிகாரங்களை பெற்றுக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் குறித்த பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பானது.

ஐ.நா மனித உரிமைகள் பிரகடனத்தை பின்பற்றி பல நாடுகளின் அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பிலும் பல ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பில் சமத்துவம், மொழி,சித்திரவதை, எதேச்சையாகக் கைது செய்யப்படுதல், தடுத்து வைத்திருக்கும் போது பின்பற்ற வேண்டிய ஏற்பாடுகள் போன்ற பல விடயங்கள் ஐ.நா மனித உரிமை பிரகடனத்திலிருந்து இலங்கை தனது அரசியல் அமைப்பில் உள்வாங்கியுள்ளது.

அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரின் தகவல் | Discussion Protection Human Rightsactivists Jaffna

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம் சுமார் 75 ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் இன்னும் அவை தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அவற்றில் உள்வாங்கப்பட்ட விடயங்களே பிரதான காரணமாகும்.

இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கங்கள் கருதி சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்தி ஒரு வரைபு ஒன்றை வழங்க உள்ளோம்.

அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரின் தகவல் | Discussion Protection Human Rightsactivists Jaffna

இந்த வரைவுக்கு ஊடகவியலாளர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

ஆகவே ஐ.நா மனித உரிமை பிரகடனம் அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் ஒரு பிரகடனமாக விளங்குகின்ற நிலையில் அதன் செயற்பாட்டுத்தன்மை மனித உரிமைகளை நிலை நிறுத்தும் என்பதில் ஐயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

வங்கி இயந்திரத்திலிருந்து பணம் திருட முயற்சி செய்த சந்தேகநபர் கைது

வங்கி இயந்திரத்திலிருந்து பணம் திருட முயற்சி செய்த சந்தேகநபர் கைது

அதிக விலையில் சந்தையில் விற்கப்படும் முட்டை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அதிக விலையில் சந்தையில் விற்கப்படும் முட்டை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US