கிழக்கு மாகாண விவசாய துறை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் அதனுடன் இணைந்த திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டிற்கான மூலதனத் திட்டங்களுக்கான வருடாந்த கொள்முதல் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடி மறுஆய்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம், நேற்று(12.02.2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில், திருகோணமலை முதலமைச்சர் செயலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்தக் கூட்டத்தில் அமைச்சகத்திற்கும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான மாகாண விவசாயத் துறை, மாகாண கூட்டுறவுத் துறை, மாகாண கால்நடை உற்பத்தித் துறை, மாகாண மீன்பிடித் துறை மற்றும் மாகாண காணி நிர்வாகத் துறை ஆகியவற்றின் கொள்முதல் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மாகாண துறைசார் அமைச்சின் செயலாளர்,மாகாண பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri