யாழ்.பலாலியில் எஞ்சியுள்ள தனியார் காணிகள்: பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கூட்டம்
யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் எஞ்சியுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைப்பதற்கு தேவையான செயல்பாட்டு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் இராணுவத்தை படிப்படியாக மீளப்பெறுவது குறித்து மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கொழும்பிலுள்ள பிரதி பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
பலாலி பகுதியில் உள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் விடுவிப்பு விடயத்தில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுமக்களின் சொத்துக்களில் ஏற்படும் தாக்கம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர தலைமையில் , பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அத்தியாவசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் சொத்துக்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய எல்லை சீரமைப்பை இறுதி செய்வதற்கான கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |