மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் தொடர்பில் மட்டக்களப்பில் கலந்துரையாடல்
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது.
உணவு ஒவ்வாமை
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் எனவும், உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும், இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.







அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
