காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து முதலுதவி படையணி சேவை நிறுத்தம்
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கடந்த மூன்று மாதங்களாக செயற்பட்டு வந்த முதலுதவி படையணி இன்று(4) தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்களம் ஆரம்பமானது முதல் சென்.ஜோன்ஸ் முதலுதவிப் படையணியினர் அங்கு நிலைகொண்டு முதலுதவி சிகிச்சைகளை வழங்கி வந்துள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
மேலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினராலும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர்.
முதலுதவி படையணி
எனினும் முதலுதவி படையணி தொடர்ந்தும் இயங்கி கொண்டியிருந்த நிலையில், நாளை மாலைக்குள் காலிமுகத்திடல் போராட்டக்களம் அகற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்று நேற்றும் இன்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து முதலுதவி படையணி இன்று முற்றாக அகன்று சென்றுள்ளது. அவர்களின் கூடாரங்களும் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri
