வடக்கில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு
கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமலுள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் தங்களது மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு மேல் உள்ள மின் பாவனையாளர் உடனடியாக கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக கட்டணம் 3000 ரூபா

கட்டணம் செலுத்தாத நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் செலுத்த
வேண்டிய மின் கட்டணப் பட்டியலின் முழுத் தொகையினையும் செலுத்துவதுடன், மீள
இணைப்பதற்கான மேலதிக கட்டணம் 3000 ரூபாவும் செலுத்த வேண்டும் என
கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் பொது மக்களை
கேட்டுக்கொண்டுள்ளது.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam